4674494 840618005
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் அதிரடி வேட்டை: பாதுகாப்புப் படையினரால் 11 தலிபான் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை!

Share

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில், தடைசெய்யப்பட்ட ‘தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ (TTP) அமைப்பைச் சேர்ந்த 11 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 8-ஆம் திகதி கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்த இடத்தைச் சூழ்ந்த பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த கடும் துப்பாக்கிச் சமரில் 6 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதே மாகாணத்தின் குர்ராம் பகுதியில் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட மற்றொரு கூட்டு நடவடிக்கையின் போது 5 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக ‘தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பினர் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருவதால், அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...