images 14
இலங்கைசெய்திகள்

நுண்கடன் தற்கொலைகளைத் தடுக்கப் புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Share

இலங்கையில் நுண்கடன் (Microfinance) காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், நுண்கடன் சுமை மற்றும் அதனால் ஏற்படும் அழுத்தங்கள் காரணமாக இதுவரை சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கவலையளிக்கும் தகவலைச் சுட்டிக்காட்டினார். ஏழை மக்களைக் கடன்பொறியில் இருந்து விடுவிக்கவும், நுண்கடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும் இந்தச் சட்டம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) பெயர் மற்றும் சின்னத்தை (Logo) சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, போலியான மொபைல் செயலி (Mobile App) ஊடாகப் பல மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் உத்தியோகபூர்வ செயலி போன்றே வடிவமைக்கப்பட்ட போலி செயலி மூலம் வைப்பாளர்களிடம் இருந்து பணம் திரட்டப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்துக் கொழும்பு பங்குச் சந்தையின் சிரேஷ்ட உப தலைவர் நிரோஷன் விஜேசுந்தர கருத்துத் தெரிவிக்கையில், “பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் செயலிகளை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த மோசடி தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.”

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...