1767596874 New Project 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்ட வழக்கு: பெப்ரவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Share

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.

தையிட்டியில் உள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றினால் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

வேலன் சுவாமிகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் சார்பாகப் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா சிரேஷ்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்

தையிட்டி விகாரை விவகாரம் வடக்கு அரசியலில் நீண்டகாலமாக ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வரும் நிலையில், இந்த வழக்கு விசாரணை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...