asian tiger mosquito
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

Share

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர இது குறித்துத் தெரிவிக்கையில், ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் 581 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நிலவிய மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளமை இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல், இருமல், சளி, கடுமையான உடல்வலி மற்றும் வாந்தி அறிகுறிகள் இருந்தால் கூடுதல் கவனம் தேவை:

காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC) செய்துகொள்வது கட்டாயமாகும். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், தாமதிக்காமல் தகுதியான வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வீடு மற்றும் சூழலில் நீர் தேங்கும் இடங்களை அகற்றி, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...