AA1TmKIK
செய்திகள்இலங்கை

இலங்கைக் கடற்கரைகளில் கரையொதுங்கும் இந்திய ஏவுகணைப் பாகங்கள்: மட்டக்களப்பில் மற்றுமொரு பாகம் மீட்பு!

Share

இந்தியாவினால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றின் சிதைந்த பாகங்கள் மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியில் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளன.

ஒந்தாச்சிமடம் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கிக் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர், அந்த ஏவுகணைப் பாகத்தைப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றுள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, இது இந்திய விண்வெளி ஆய்வு அல்லது பாதுகாப்பு சோதனைகளின் போது ஏவப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி எனக் கருதப்படுகிறது.

இதேபோன்றதொரு ஏவுகணைப் பாகம் கடந்த மாதம் (டிசம்பர்) 28-ஆம் திகதி திருகோணமலை, சம்பூர் மலைமுந்தல் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியிருந்தது. குறுகிய கால இடைவெளியில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏவுகணைப் பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை பாகங்கள் தொடர்பில் மேலதிக ஆய்வுகளை இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...