AA1TmKIK
செய்திகள்இலங்கை

இலங்கைக் கடற்கரைகளில் கரையொதுங்கும் இந்திய ஏவுகணைப் பாகங்கள்: மட்டக்களப்பில் மற்றுமொரு பாகம் மீட்பு!

Share

இந்தியாவினால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றின் சிதைந்த பாகங்கள் மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியில் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளன.

ஒந்தாச்சிமடம் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கிக் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர், அந்த ஏவுகணைப் பாகத்தைப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றுள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, இது இந்திய விண்வெளி ஆய்வு அல்லது பாதுகாப்பு சோதனைகளின் போது ஏவப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி எனக் கருதப்படுகிறது.

இதேபோன்றதொரு ஏவுகணைப் பாகம் கடந்த மாதம் (டிசம்பர்) 28-ஆம் திகதி திருகோணமலை, சம்பூர் மலைமுந்தல் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியிருந்தது. குறுகிய கால இடைவெளியில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏவுகணைப் பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை பாகங்கள் தொடர்பில் மேலதிக ஆய்வுகளை இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...