SAARC
செய்திகள்அரசியல்இலங்கை

பீகாரில் சார்க் பத்திரிகையாளர்கள் மன்ற சர்வதேச மாநாடு: இலங்கையின் ஊடக அடக்குமுறை குறித்து விரிவான விவாதம்!

Share

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நிலவும் ஊடக அடக்குமுறைகள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிப்பதற்கான சார்க் (SAARC) பத்திரிகையாளர்கள் மன்றத்தின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு நாளை (04) இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

பீகார் மாநிலத்தின் நாளந்தா திறந்த பல்கலைக்கழகம் (Nalanda Open University) 2026 ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

பீகார் மாநில ஆளுநர் கங்கா பிரசாத் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மொரீஷியஸ் சர்வதேச கலாசார தூதர் சரிதா புத்து, சார்க் பத்திரிகையாளர்கள் மன்ற சர்வதேச தலைவர் ராஜு லாமா (நேபாளம்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை நிலைநாட்டவும், ஊடகப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள்.

குறிப்பாக, இலங்கையில் அண்மைக்காலமாகப் பதிவாகியுள்ள ஊடக அடக்குமுறைகள், கருத்துச் சுதந்திர மீறல்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்படும் தடைகள் குறித்து சார்க் பத்திரிகையாளர்கள் மன்றம் விரிவாகக் கலந்துரையாடவுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னணி செய்தி வாசிப்பாளர் சித்ரா திரிபாதி உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் ஆறு பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றுத் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...