ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் (Trailer) நாளை வெளியாகவுள்ள நிலையில், அதனைத் திரையரங்குகளில் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
‘ஜன நாயகன்’ படத்தின் விறுவிறுப்பான முன்னோட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த முன்னோட்டத்தை யூடியூப் தளத்தில் மட்டுமன்றி, திரையரங்குகளிலும் ரசிகர்கள் கண்டு களிக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில் உள்ள பிரபல ARK ராம் முத்துராம் சினிமாஸ் (RGB) திரையரங்கில், படத்தின் முன்னோட்டத்தைக் காண்பதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. முன்னோட்டத்திற்கே திரையரங்குகளில் முன்பதிவு நடப்பது ரசிகர்களிடையே நிலவும் பெரும் எதிர்பார்ப்பைக் காட்டுகிறது.
விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக நடிக்கும் கடைசித் திரைப்படம் இது என்று கூறப்படுவதால், ‘ஜன நாயகன்’ படத்தின் மீது உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்குத் தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஜனவரி 9-ஆம் திகதி இப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், நாளை வெளியாகவுள்ள முன்னோட்டம் சமூக வலைதளங்களில் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.