MediaFile
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி!

Share

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை, 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) மன்னார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

சட்டத்தரணி எஸ். டினேசன் வழங்கிய தகவல்களின்படி, கடந்த ஆண்டு ஜனவரி 16 அன்று மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவருக்கு அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அலுவலகத்தில் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அந்தத் தடுப்புக் காவல் இன்று (02) மதியத்துடன் நிறைவடைந்தது.

இன்று மதியம் பலத்த பாதுகாப்புடன் சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆரம்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் எழுத்துப்பூர்வ அனுமதி கிடைக்காததால், ஜனவரி 12 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

பின்னர், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியிடமிருந்து 90 நாட்கள் தடுப்புக் காவலுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட ‘நகர்தல் பத்திரத்தின்’ (Motion) மூலம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சி.ஐ.டி.யினரின் 90 நாள் தடுப்புக் காவல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் குறித்த சந்தேக நபரைத் தடுத்து வைத்து, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணி மற்றும் ஏனைய குற்றக் கும்பல்களுடனான தொடர்புகள் குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...