நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனைகளில், கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 840 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சோதனைகளின் போது ஹெரோயின் 378 கிராம், ஐஸ் (ICE) 417 கிராம், ஹஷீஷ் உள்ளிட்ட ஏனைய பின்வரும் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன:
கைது செய்யப்பட்டவர்களில் 11 பேரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்ட 6 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ் நேற்று சுமார் 28,879 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் முடிவுகள் வருமாறு:
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 22 பேர் கைது. திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 126 பேர் கைது. மதுபோதையில் மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் செலுத்திய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்களின்படி, நாட்டைப் போதைப்பொருள் அற்ற வலயமாக மாற்றும் இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.