images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

Share

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், யுனிசெப் (UNICEF) அமைப்பு பாரிய அளவிலான போஷணைப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கான மக்கள் தங்குமிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இந்தச் சூழலில், போதிய உணவு கிடைக்காத காரணத்தால் 6 மாதக் குழந்தைகள் முதல் 5 வயது வரையிலான சிறுவர்கள் மத்தியில் மந்தபோஷணை நிலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

இதனைத் கருத்திற் கொண்டு, சிறுவர்களுக்கு அவசியமான BP-5 எனும் 25,000 கிலோகிராம் (25 மெற்றிக் தொன்) போஷணைப் பதார்த்தங்களை யுனிசெப் வழங்கியுள்ளது. கொழும்பிலுள்ள யுனிசெப் அலுவலக அதிகாரிகள், இந்தப் பொருட்களைச் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

இந்த உதவித் திட்டத்தின் மூலம் அனர்த்தப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களின் போஷணைத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...