25 687ca2a2564c6
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி!

Share

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கொள்கையல்ல என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (21) வட மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது பிரதமர் வெளியிட்ட முக்கிய கருத்துக்கள்.

2025ஆம் ஆண்டு முதல் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, நாட்டின் கல்வி முறைமை பலப்படுத்தப்படும். 2026ஆம் ஆண்டில் நிலவும் ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

வவுனியா மற்றும் கிளிநொச்சி பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர் மற்றும் தங்குமிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் கல்வித்துறை சார் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என அண்மைய மீளாய்வில் தெரியவந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் இதில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும்.

நாட்டு மக்களுக்கு உண்மையான பயன் கிடைக்கும் வகையிலேயே அரசாங்கம் தற்போதைய பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது. அரசாங்கம் முன்னெடுக்கும் இத்தகைய மாற்றங்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்குச் சமமான கல்வி வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...