1766303338 Sri Lanka Colombo air quality index 6
செய்திகள்இலங்கை

இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் வீழ்ச்சி: 200 வரை அதிகரித்த தரக்குறியீடு!

Share

இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் அபாயகரமான அளவில் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன இது குறித்துத் தெரிவிக்கையில் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 150 முதல் 200 வரை அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமற்ற ஒரு நிலையாகும். எல்லை கடந்த காற்று இயக்கம் (Transboundary air pollution) மற்றும் தற்போது நிலவும் வடகிழக்கு பருவமழை கால நிலை மாற்றங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

காற்றின் தரம் குறைந்துள்ளதால் சுவாசம் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் உடல்நலப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் அசௌகரியங்கள் அல்லது சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுமாயின், உடனடியாகத் தாமதிக்காமல் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...