1766303338 Sri Lanka Colombo air quality index 6
செய்திகள்இலங்கை

இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் வீழ்ச்சி: 200 வரை அதிகரித்த தரக்குறியீடு!

Share

இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் அபாயகரமான அளவில் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன இது குறித்துத் தெரிவிக்கையில் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 150 முதல் 200 வரை அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமற்ற ஒரு நிலையாகும். எல்லை கடந்த காற்று இயக்கம் (Transboundary air pollution) மற்றும் தற்போது நிலவும் வடகிழக்கு பருவமழை கால நிலை மாற்றங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

காற்றின் தரம் குறைந்துள்ளதால் சுவாசம் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் உடல்நலப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் அசௌகரியங்கள் அல்லது சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுமாயின், உடனடியாகத் தாமதிக்காமல் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...