22731289 police
செய்திகள்உலகம்

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு – 9 பேர் உயிரிழப்பு!

Share

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள பெக்கெர்ஸ்டால் (Bekkersdal) பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதுடன், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1:00 மணியளவில் பெக்கெர்ஸ்டால் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு வெளியே மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தபோது, இரண்டு கார்களில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

கார்களில் இருந்து இறங்கிய நபர்கள் அரை நிமிடத்திற்கும் மேலாகக் கூட்டத்தை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கிச் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் இம்மாதத்தில் இடம்பெறும் இரண்டாவது பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.

கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி பிரெட்டோரியாவில் நடந்த தாக்குதலில் 3 வயதுக் குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்திருந்தனர். தனிநபர்கள் துப்பாக்கி உரிமம் பெறுவதில் உள்ள எளிமை மற்றும் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை அதிகரித்துள்ளமையே இவ்வாறான வன்முறைகளுக்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பிச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்கப் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சமூக விரோதக் கும்பல்களுக்கு இடையேயான பகையே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...