articles2FgXcy4cN9KrF77yKDhQ7d
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உளநல மேம்பாட்டுத் திட்டம்: திங்கட்கிழமை ஆரம்பம்!

Share

அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆரோக்கியம் மற்றும் நலன்புரி ஓம்புகையை மேம்படுத்தும் நோக்கில், வளவாளர்களைப் பயிற்றுவிக்கும் விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஆரம்பமாகவுள்ளது.

இந்த விசேட பயிற்சியின் போது சிரேஷ்ட உளவியலாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவினர் கலந்துகொண்டு, அனர்த்தத்தின் பின் ஏற்படும் மன அழுத்தத்தைக் கையாள்வது குறித்துப் பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கிராமிய அபிவிருத்தி அமைச்சு, சமூக பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகிய ஐந்து அமைச்சுகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன.

குறிப்பாக அனர்த்தங்களினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை இலக்கு வைத்து இந்த உள சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அனர்த்தங்களின் பின்னர் மக்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சி மற்றும் மன ரீதியான சவால்களைச் சரியாகக் கையாள்வதற்கும், அவர்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாகக் கட்டியெழுப்புவதற்கும் இந்தத் திட்டம் ஒரு பலமான அடித்தளமாக அமையும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...