court 1 467564
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கணிதப் புள்ளிகள் குறைந்ததற்காக மாணவிக்கு 160 பிரம்படி: தனியார் வகுப்பு ஆசிரியருக்கு பிணை!

Share

காலி நகரில் தனியார் வகுப்பு ஒன்றில் கல்வி பயிலும் 11-ஆம் தர மாணவிக்கு மனிதாபிமானமற்ற முறையில் 160 பிரம்படிகள் வழங்கி காயப்படுத்திய ஆசிரியரை பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி நகரில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில், 11-ஆம் தர மாணவி ஒருவருக்கு ஆசிரியர் கணித வினாத்தாள் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அந்த மாணவி எதிர்பார்த்த புள்ளிகளை விட 32 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளார். இதற்காக ஆத்திரமடைந்த ஆசிரியர், ஒரு புள்ளிக்கு 5 அடிகள் என்ற வீதத்தில் மாணவியின் இரு கைகளிலும் மொத்தம் 160 முறை பிரம்பால் அடித்துத் தண்டித்துள்ளார்.

ஆசிரியரின் கொடூரமான தாக்குதலால் பலத்த காயமடைந்த மாணவி, தற்போது காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், காலி தலைமையக காவல்நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் உறவினர்கள் தன்னைத் தாக்கியதாகக் கூறி, குறித்த ஆசிரியரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (19) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த காலி மேலதிக நீதவான் மஹேஷிகா விஜேதுங்க, தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல ஆசிரியருக்கு அனுமதி வழங்கினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...