25 6935258a163d2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹுன்னஸ்கிரியவில் மண்சரிவு: ஒருவர் காயம், 3 வீடுகள் சேதம்; 90 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

Share

கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகாமையில் இன்று (18) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மூன்று வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

பிரதேசத்தில் நிலவி வரும் கடும் மழை காரணமாக இன்று காலை இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மண்சரிவினால் அப்பகுதியில் உள்ள 3 வீடுகள் முற்றாக அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் நிலவும் மேலதிக மண்சரிவு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, அருகிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த 90 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...