New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

Share

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச ரீதியிலான அறிவைக் கொண்டவர். அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதில் அவர் கொண்டுள்ள ஆற்றலை நாட்டின் நன்மைக்காகப் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய முக்கிய உறுப்பினர்களோ தற்போதைய அரசாங்கத்தில் எந்தவிதமான அமைச்சுப் பதவிகளையோ அல்லது பொறுப்புகளையோ ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லை என்பதைத் தலதா அத்துகோரள தெளிவுபடுத்தினார்.

“தங்களது தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, அனர்த்த நிவாரணப் பணிகளில் அரசாங்கத்திற்குத் தேவையான களமட்ட உதவிகளை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாங்களும் தயாராக இருக்கிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியான வேறுபாடுகளுக்கு அப்பால், தேசிய அனர்த்தத்தின் போது அனுபவமுள்ள தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது நாட்டுக்குச் சாதகமாக அமையும் என அவர் வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...