image
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். நிவாரண நிதியில் மோசடி இருந்தால் உடன் அறிவிக்கவும்: பாதிக்கப்பட்டோர் பெயர்ப் பட்டியல் வெளியீடு!

Share

‘டித்வா’ சூறாவளிப் பேரிடரில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்று இருந்தால் அது தொடர்பில் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் ரூபாய் 25,000 நிதியுதவி பெறத் தகுதியானவர்கள் எனத் தெரிவானோரின் பெயர்கள் அடங்கிய விபரம் இன்று (10.12.2025) முதல் பிரதேச செயலக ரீதியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றினை பொதுமக்கள் எவரும் பார்வையிட முடியும்.

பாதிக்கப்பட்ட எவரேனும் ஒருவரின் பெயர் பட்டியலில் இணைக்கப்படாமல் இருந்தால் அல்லது தவறான வழியில் எவரேனும் ஒருவரின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தால், அதுகுறித்து உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் 30ஆம் இலக்க அறையில் இயங்கும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் எஸ். கபிலன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புகார்களைத் தெரிவிக்கும்போது உரிய ஆதாரங்களுடன் அவற்றைத் தெரிவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...