4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

Share

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், ரஷ்யாவுக்குத் தமது நிலப்பகுதியை விட்டுக் கொடுக்காத வகையில் ஒப்பந்தம் அமைந்துள்ளது என்பதாகும்.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, எந்த நிலத்தையும் ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க முடியாது என்றும், அது உக்ரைன் அரசியல் சட்டத்திற்கும் சர்வதேச சட்டத்திற்கும் முரண்படும் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய மற்றும் நேட்டோ தலைவர்களைச் சந்தித்த பின்னர், அமெரிக்காவுக்குத் தமது புதிய திட்டத்தை விரைவில் அனுப்பலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின்படி, ரஷ்யாவுக்கு உக்ரைனின் நிலத்தை விட்டுக் கொடுக்கும் அம்சம் இடம்பெற்றிருந்தது.

அமெரிக்கா முன்வைத்த 28 அம்ச அமைதி முன்மொழிவு உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த முன்மொழிவு ரஷ்யாவுக்குச் சாதகமானது என்றும் அந்த நாடுகள் விமர்சனம் வெளியிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...