images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

Share

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின் பேரில், பாகிஸ்தான் தனது மனிதாபிமான உதவிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இலங்கைக்கு மேலதிகமாக 7.5 டன் நிவாரணப் பொருட்களை அந்நாடு அனுப்பி வைத்துள்ளதாகப் பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை (NDMA). இன்று (டிசம்பர் 8) லாகூரில் இருந்து கொழும்புக்கு வர்த்தக விமானம் மூலம் இந்த உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கான கூடாரங்கள் (Tents), பாய்கள் (Mats) மற்றும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இந்தச் சரக்கில் அடங்குகின்றன.

வர்த்தக விமானங்களின் சரக்கு இடவசதியைப் பயன்படுத்தி நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்புவதற்கான பொறிமுறையை NDMA உருவாக்கியுள்ளதுடன், இது எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த அவசரநிலை தொடங்கியதிலிருந்து, பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகிறது.

பாகிஸ்தான் இராணுவத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் (SAR), அத்துடன் கடற்படைக் கப்பல்கள் மற்றும் உலங்குவானூர்திகள், இலங்கைக் குழுக்களுடன் இணைந்து மீட்பு மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு உதவுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...