articles2FWdcbeAlRn6LMdiTyRA63
செய்திகள்இலங்கை

இலங்கையில் நிகழ்நேர இலத்திரனியல் சிட்டை  முறைமைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Share

இலங்கையில் நிகழ்நேர இலத்திரனியல் சிட்டை (e-invoice) முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வரி நிர்வாகத்தை நவீனமயமாக்குவதற்கும், வரி ஏய்ப்பைக் குறைப்பதற்கும், வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், ஏற்புடைய விடயங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி திரட்டுவதற்காக அமுல்படுத்தியுள்ள வரி அறவீட்டு நிர்வாக முகாமைத்துவத் தகவல் முறைமை (RAMIS) இற்கு இணங்கியொழுகும் வகையில் இலத்திரனியல் சிட்டை வேலைச்சட்டகத்தைக் கடைப்பிடிப்பதற்காக மதிப்பாய்வொன்றைச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதிப்பாய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில், இலத்திரனியல் சிட்டை முறைமையை நடைமுறைப்படுத்துவதன் ஆரம்பக் கட்டமாக பாதுகாப்பு இணையத்தள செயலி வேலைத்திட்ட இடைமுகப்பு (Web Appilication Programming Interface – Web API) வசதியை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரிப் பதிவு செய்துள்ளவர்களுக்கான Web API வசதியை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி திரட்டுவதற்காக அமுல்படுத்தியுள்ள வரி அறவீட்டு நிர்வாக முகாமைத்துவத் தகவல் முறைமையை (RAMIS) மேம்படுத்துவதற்காக சிங்கப்பூரின் NCS Solution Pvt Limited இற்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...