archuna 090325 seithy
செய்திகள்அரசியல்இலங்கை

அவருக்கு என்ன நடந்தது”: தந்தை காணாமல் போனது குறித்துக் கண்ணீருடன் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!

Share

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து உரையாற்றுகையில், தனது தந்தை காணாமல் போனமை தொடர்பில் கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பினார்.

விடுதலைப் புலிகள் காலத்தில் காவல்துறையில் பணியாற்றிய தனது தந்தை காணாமல் போனது குறித்து அவர் வேதனையுடன் பேசினார்.

“சர்வதேச அமைப்புகளிடம் முறைப்பாடு அளித்தும், சாட்சியமளித்தும் எந்தப் பலனும் இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.

“அவருக்கு என்ன நடந்தது என்று இன்று என்னால் அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது,” என்று உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்ட அவர், சிங்களம் பேசக் கற்றுக்கொடுத்தது தன் தந்தைதான் என்று நினைவு கூர்ந்தார்.

சுகாதார முறைமை குறித்துக் கடுமையாக விமர்சித்த அர்ச்சுனா, மருத்துவமனை குறைபாடுகளை அம்பலப்படுத்தியதற்காகத் தான் எதிர்கொண்ட சவால்களையும் சுட்டிக்காட்டினார்:

சேவை செய்ய முற்பட்டதற்காகவும், வைத்தியசாலைக் குறைபாடுகளை அம்பலப்படுத்தியதற்காகவும் தான் கைது செய்யப்பட்டுச் சிறையிலிடப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

மன்னார் வைத்தியசாலையில் இரவில் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறிக் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவது என்பது பெயர்ப்பலகைகளை மாற்றுவதால் நடக்காது என்றும், அதற்கு மேலதிகமாக மருத்துவர்கள், தாதிகள் போன்ற மனிதவளத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...