MediaFile 2 5
இலங்கைபிராந்தியம்

மன்னாரில் தேசிய நீர் வழங்கல் சபையின் விசேட முகாம்: பெரிய கரிசல் கிராமத்தில் ஒரே நாளில் புதிய இணைப்புச் சேவை!

Share

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான விசேட முகாம் நாளை (நவம்பர் 21, 2025) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாம் பெரிய கரிசல் பள்ளிவாசலில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

வழக்கமாகப் புதிய நீர் இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்குப் பொதுமக்கள் அலுவலகத்திற்குப் பலமுறை செல்ல வேண்டியிருப்பதோடு, விண்ணப்பித்தல், கள ஆய்வு மற்றும் மதிப்பீட்டுத் தொகையைச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கும் அதிக நாட்கள் தேவைப்படுகின்றன.

பொதுமக்களின் இத்தகைய சிரமங்களைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், விண்ணப்பம் கோருதல் முதல் கட்டணம் செலுத்துதல் வரையிலான அனைத்து சேவைகளையும் ஒரே நாளில், ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தேவையற்ற அலைச்சல்கள் இன்றிப் புதிய நீர் இணைப்புக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...