image c40cb1ef0e
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்க மீதான விசாரணை இறுதிக்கட்டத்தில்: விரைவில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் – சட்ட மாஅதிபர் அறிவிப்பு!

Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்தி வரும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகச் சட்ட மாஅதிபர், கோட்டை நீதிவான் நெத்தி குமாரவுக்கு இன்று (நவம்பர் 19) தெரியப்படுத்தியுள்ளார்.

சட்ட மாஅதிபர் அறிக்கை: சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ரணில் விக்ரமசிங்கவின் செயலாளரின் சார்பாகப் பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை மீளப் பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன்படி, பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்களை வழங்கிய ஜனாதிபதி சட்டத்தரணி, தனது மகளின் பிரசவத்தில் கலந்துகொள்வதற்காகவே வெளிநாட்டுப் பயணத் தடையைத் தளர்த்துமாறு செயலாளர் கோரியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...