24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

Share

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என விமர்சிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

என்னை ஹிட்லர் என்கிறார்கள். பாவம். ஹிட்லரைத் தோற்கடிக்க அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றிணைந்தது போல ஹிட்லரைத் தோற்கடிக்க ரஷ்யாவும், அமெரிக்காவும் இணைந்தது ஒரு வரலாற்றுப் பதிவு, அதனுடன் ஒப்பிடாதீர்கள்.

மக்களுக்கு எதிராக யாரேனும் தவறு இழைத்திருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். யாருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாது.

குற்றமிழைத்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும். அதற்கு நீங்கள் என்ன பெயர் வைத்தாலும், என்ன விளக்கம் வழங்கினாலும் சட்டத்தை செயற்படுத்துவோம்.

எந்தப் பதவியில் இருந்தாலும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

Share
தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...