images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

Share

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water Cannon Attack) போது இலங்கை பணியாளர்கள் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வெளிநாட்டுப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க கூடுதல் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வெளிநாட்டுப் புலம்பெயர் தொழிலாளர்களை இலக்கு வைத்து அங்குள்ள உள்ளூர் குழுக்களால் இந்த இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இலங்கைப் பணியாளர்கள் தூதரகத்துடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டுப் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் இலங்கைத் தூதரகம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இரசாயன நீர்த்தாரைப் பிரயோகம் தொடர்பில் 13 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட 05 பேர் இஸ்ரேல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறான தாக்குதல்களின் பின்னர் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்குப் பின்வரும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன:

அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். பணம் அனுப்புவதற்கு தனித்து செல்லாது, குழுவாகப் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் பயணங்களின் போது பெறுமதியான பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...