34d96040 2a8a 11f0 b26b ab62c890638b.png
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் காற்றாலைத் திட்டங்கள்: மக்களின் விருப்பமின்றி மேலும் திட்டங்கள் இல்லை – அமைச்சரவை அங்கீகாரம்!

Share

மன்னார் தீவு மக்களின் விருப்பம் இல்லாமல், தொடர்ந்து அங்கு புதிய காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை முன்னெடுக்காமல் இருப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதேச மக்கள் முன்வைத்த சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ரீதியில் மீளாய்வு செய்யப்பட்ட வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிக காற்று ஆற்றல் வளம் கொண்ட பகுதியாக மன்னார் தீவில் மொத்தம் மூன்று காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன இது 2021ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

Windscape Mannar (Pvt) Ltd: 20 மெகாவாட் திட்டம், எதிர்வரும் டிசம்பரில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. Hayleys Fenton: 50 மெகாவாட் திட்டம், 2026 டிசம்பரில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மன்னார் தீவு மக்களின் எதிர்ப்பின் காரணமாக இந்தக் கருத்திட்டங்களின் நடைமுறைப்படுத்தலை இடைநிறுத்தும் சூழல் நிலவியது. இந்தநிலையில், ஜனாதிபதியினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பின்வரும் அறிவித்தல் வழங்கப்பட்டு, அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:

குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் மன்னார் தீவு மக்களின் விருப்பத்துடன் மட்டுமே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், இந்த மூன்று திட்டங்களுக்கு மேலதிகமாக வேறு காற்றாலைத் திட்டங்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.

அவ்வாறு புதிய காற்றாலைத் திட்டங்கள் அமைப்பதாயின், அதற்குப் பொருத்தமான மாற்று இடம் தெரிவு செய்யப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...