MediaFile 1 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா மாணவர் மரணம்: பகிடிவதை குற்றச்சாட்டுக்கு மத்தியில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டன!

Share

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 31) மர்மமான முறையில் உயிரிழந்த முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரின் உடற்கூற்று மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக இன்று (நவம்பர் 03) கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா. சுரேந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர் ஏனைய மாணவர்களுடன் மதுபானம் அருந்தியதன் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாகவே உயிரிழந்ததாக ஆரம்பத் தகவல்கள் கூறின.

எனினும், உயிரிழந்த மாணவரின் உறவினர்கள், அவர் சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை (Ragging) காரணமாகவே உயிரிழந்ததாகப் பூவரசன்குளம் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பூவரசன்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மாணவரின் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது.

எவ்வாறாயினும், அவர் உயிரிழந்தமைக்கான உறுதியான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், உண்மையை உறுதிப்படுத்தவே உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...