25 6905eb3e5c516
செய்திகள்இலங்கை

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு சந்திரிகா வெளியேற்றம்: உடைமைகளை மூட்டை கட்டும் படங்கள் வெளியீடு!

Share

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பில் உள்ள நிதாஹஸ் மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காகத் தனது உடைமைகளை மூட்டை கட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற நவம்பர் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியிருந்தார்.

எனினும், அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது உடைமைகளைப் பிரித்து வருவதாகவும், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அவர் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஏற்கனவே வெளியேறி தங்காலைக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Accident
இலங்கை

இளைஞரின் உயிர் பறித்த விபத்து – தப்பி சென்ற சாரதி கைது.

  சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வாகன விபத்தை...

gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...