images 2 4
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்: தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க கோரிக்கை

Share

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28.10.2025) பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.

உயர்ஸ்தானிகருடன் அவரது பாரியாரும் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அவர்கள் விகாரையின் விகாராதிபதி வரக்காபொல இந்திரசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து விகாரை தொடர்பான குறைபாடுகளைக் கேட்டறிந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது விகாரை மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்டது என்றும், விகாரைக்குச் சொந்தமான காணிகளைச் சிலர் அபகரித்துள்ளதாகவும் விகாராதிபதி சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்களைப் பாதுகாத்து, அவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு வழிவகை செய்வதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் அந்தப் பகுதியினரின் வாழ்வாதாரமும் சிறப்பாகும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்தத் தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

விகாராதிபதியின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர், விகாரைக்கு சூரிய மின்சாரம் அமைப்பதற்கான முதல் கட்ட நிதியை அரசாங்கத்திடம் ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும், மிகுதிப் பணம் மிக விரைவில் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...