44036824 9
பொழுதுபோக்குசினிமா

“டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கப் பயந்தேன்”: நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

Share

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான ‘பிரேமம்’ மூலம் அவர் அறிமுகமானார்.

அதன்பின்னர் தமிழ் பக்கம் வந்த அவர், தனுஷின் ‘கொடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர், இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு பேட்டியில் அனுபமா அவர் சந்தித்த சில சவால்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

“பிரேமம் படத்திற்குப் பிறகு, டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கத் தயங்கினேன், பயந்தேன். மலையாள சினிமாவில் பலர் எனக்கு நடிக்கத் தெரியாது என்று கூறினர். ஆனால், எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

என் முழு உழைப்பைச் செலுத்தினேன். இன்று என்னைத் திரும்பிப் பார்த்தால் எனக்குப் பெருமையாக உள்ளது.

இப்போது, மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறேன். எனது நடிப்பு வாழ்க்கை ஒரு புதிய அத்தியாயத்துக்குள் (New Chapter) நுழைந்திருக்கிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...