25 68fa0ce16e51c
செய்திகள்இலங்கை

“நலன் முரண்பாட்டில் செயல்பட்ட சிறிதரன்”: நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறியதாக சாமர சம்பத் குற்றச்சாட்டு!

Share

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய (அக்டோபர் 23) நாடாளுமன்ற அமர்வில், இது தொடர்பான ஒரு கடிதத்தை சாமர சம்பத் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார்.

சிறிதரன் ஊழல் செய்ததாகவும், நலன் முரண்பாட்டுடன் செயல்பட்டதாகவும், மேலும் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணையைத் தடுக்க முயன்றதாகவும் தசநாயக்க குற்றம் சாட்டினார்.

சிறிதரன் உறுப்பினராக உள்ள அரசியலமைப்பு பேரவைக்கு, குறித்த முறைப்பாடு தொடர்பில் தெரிவிக்க அவர் தவறிவிட்டதாகவும் சாமர குறிப்பிட்டார்.

சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு (CIABOC) உறுப்பினர்களை நியமிப்பது அரசியலமைப்புப் பேரவையின் பொறுப்பாகும்.

எனவே, சிறிதரன் தனது சொந்த வழக்கின் முடிவைப் பாதிக்கக்கூடிய முடிவுகளில் ஈடுபட்டுள்ளதால், இது ஒரு நலன் முரண்பாடாக அமைகிறது என்று தசநாயக்க வாதிட்டார்.

Share
தொடர்புடையது
Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...