images 1 4
செய்திகள்இலங்கை

தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை கிளைத் தெரிவு: சோமசுந்தரம் சுகிர்தன் தலைவராகப் பொறுப்பேற்பு!

Share

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளைத் தெரிவு மாவிட்டபுரத்தில் நேற்று (அக்21) நடைபெற்றது.

நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய நிர்வாகத் தெரிவின்படி, காங்கேசன்துறை தொகுதிக் கிளையின் முக்கியப் பொறுப்பாளர்கள் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டனர்:

தலைவர்: வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்
உப தலைவர்: வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தங்கராசா
செயலாளர்: வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் விஜயராஜ்
உப செயலாளர்: முன்னாள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் மரியதாஸ்
பொருளாளர்: வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உதயசங்கர்

மேலும், 21 வட்டாரங்களைக் கொண்ட வலி வடக்கில், நிர்வாக முக்கியப் பொறுப்புகளில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வட்டாரங்களைத் தவிர்த்து, ஏனைய வட்டாரங்களுக்குப் பொறுப்பாக ஒவ்வொருவர் தெரிவு செய்யப்பட்டனர்.

கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இது குறித்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நுண்கடன் பிரச்சினை முதலான நடைமுறை ரீதியான பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து மக்களுக்குச் சிறந்த பணியாற்றுவதே இந்தப் புதிய நிர்வாகத் தெரிவின் குறிக்கோள் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 67c59f0b797d7
இந்தியாசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்தி தப்பிக்க உதவிய 4 சந்தேகநபர்களுக்கு நவம்பர் 7 வரை விளக்கமறியல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட...

25 68fb42eb327aa
செய்திகள்இலங்கை

பாடசாலை நேர நீட்டிப்புக்கு எதிர்ப்பு: ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்ட எச்சரிக்கை!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால்...

379161 crime 02 1
செய்திகள்இலங்கை

வாள்வெட்டு, போதைப்பொருள் கடத்தல்: சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு!

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு...

Kajen
செய்திகள்இலங்கை

“வடக்கு-கிழக்கில் போதைப்பொருள் பரவலுக்கு இராணுவமே காரணம்”: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போதைப்பொருளைப் பரப்புவதில் இராணுவத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது எனத் தமிழ்த்...