1760884555 Paris Louvre Museum Sri Lanka 6
செய்திகள்உலகம்

உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு: பாரிஸில் அருங்காட்சியகம் மூடல்!

Share

பாரிஸில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான, உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் விளைவாக, அருங்காட்சியகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அருங்காட்சியகம் இன்று (அக்டோபர் 19) காலை திறக்கப்பட்டபோது இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், என்ன திருடப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

232 ஆண்டுகள் பழமையான இந்த அருங்காட்சியகம் 1793 இல் திறக்கப்பட்டது. இதில் 16 ஆம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் உட்படப் பல உலகப் புகழ்பெற்ற பழங்காலக் கலைப்பொருட்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும், 8.7 மில்லியன் மக்கள் லூவ்ரே அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர், இது அந்த ஆண்டில் உலகிலேயே அதிகளவானோர் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...