suryakumar salman agha 1200 1760670009
செய்திகள்உலகம்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

Share

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 உள்ளூர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட “கோழைத்தனமான தாக்குதல்” என்று விபரித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளது.

உயிரிழந்த வீரர்கள் நட்பு போட்டியொன்றில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள உர்குனிலிருந்து ஷரானாவுக்குப் பயணித்துள்ளனர். “உர்குனில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்கள் ஒன்று கூடல் ஒன்றின் போது குறிவைக்கப்பட்டனர்,” என ACB தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட மூன்று வீரர்களையும் கபீர் (Kabeer), சிப்கத்துல்லா (Sibghatullah) மற்றும் ஹாரூன் (Haroon) எனப் பெயரிட்டுள்ள ACB, இந்தத் தாக்குதலில் மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. சில ஊடக அறிக்கைகளின்படி, கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்,” அடுத்த மாதம் நவம்பர் 17 முதல் 29 வரை ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடரில் இருந்து விலகுவதற்கு முடிவெடுத்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

“இந்த ஒடுக்குமுறையாளர்களால் அப்பாவி பொதுமக்கள் மற்றும் எமது உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது ஒரு கொடூரமான, மன்னிக்க முடியாத குற்றம்,” என்று சர்வதேச வீரர் ஃபஸல்ஹக் ஃபாரூக்கி தெரிவித்துள்ளார். மற்றொரு சர்வதேச வீரரான முகமது நபி, “இது ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குடும்பத்திற்கும், தேசத்திற்கும் ஏற்பட்ட துயரம்” என்றுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
1755232595226130 0
இலங்கைசெய்திகள்

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்பு உப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 22,950 மெட்ரிக் தொன் உப்பை இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க...

292a7af3 f588c163 e7655f0e 0298d802 80f489e3 0508342b sarath weerasekera 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
செய்திகள்அரசியல்இலங்கை

13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மாகாணம் சுயாதீனமாகும்” – சரத் வீரசேகர அச்சம்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால், இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு...

images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘கொள்கைக் கூட்டு’ முடிவுக்கு வருகிறது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில்...

25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...