11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

Share

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு நிலவரப்படி இன்று தங்கத்தின் விலையானது 4 இலட்சத்தை அடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,233 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (16) 4,233 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,640 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 60,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று காலை (16), கொழும்பில் ஹெட்டி தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கத்தின் ஒரு பவுண் ரூ. 10,000 அதிகரித்து, புதிய விலை ரூ. 360,800 இற்க விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை, ரூ. 305,300 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை ரூ. 330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் ஒரு பவுண் விலை இப்போது ரூ. 390,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்க சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...