12 10
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முரணான கருத்துக்கள்.. அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அரசு!

Share

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் சமீபத்திய கூட்டத்தின் போது கூறப்படாத கருத்துக்கள் குறித்து, தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று(09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குழுவின் எந்த உறுப்பினருக்கும் உள் விவாதங்களை ஊடகங்களுக்கு வெளியிட நெறிமுறை உரிமை இல்லை என்று அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவது நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் தேசிய நலன்களைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அதை வழங்கியவர்கள் இருவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இந்தியாவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாகவோ அல்லது மூளையாகச் செயல்பட்டவர் இந்தியாவுடன் தொடர்புடையவர் என்றோ செயலாளர் ரவி செனவிரத்ன எந்த நேரத்திலும் கூறவில்லை என்பதை ஹேரத் இதன் போது தெளிவுபடுத்தினார்.

எனவே இந்த அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட வலுவான இராஜதந்திர உறவுகளை சேதப்படுத்தும் நோக்கில், கூறப்பட்ட முற்றிலும் தவறான கதை இது, என்றும் அவர் தமது உரையில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...