6 13
இலங்கைசெய்திகள்

வசந்த சமரசிங்க மற்றும் அவரது மக்கள் தொடர்பு அதிகாரிக்கு எதிராக தவறான செய்திகள்

Share

அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் அவரது மக்கள் தொடர்பு அதிகாரி நிமோதி விக்ரமசிங்க ஆகியோரை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தவறான மற்றும் அவதூறான இடுகைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு முறைப்பாடு அளித்துள்ளது.

சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் சில இணையத்தளங்கள் புனையப்பட்ட கதைகள், திருத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்திகள் அமைச்சர் மற்றும் அவரது ஊழியர்களின் தனிப்பட்ட, குடும்ப மற்றும் தொழில்ரீதியான நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதுடன், அவரது அரசியல் நற்பண்புக்கும் களங்கம் விளைவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அவற்றுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களை விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தை கோரியுள்ளது.

Share
தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...