15 5
இலங்கைசெய்திகள்

பெருந்தொகையான கட்டணத்தை செலுத்தாமல் அநுர அரசை ஏமாற்றிய மகிந்த குடும்பம்

Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சாரம் மற்றும் நீர் கட்டண நிலுவை தொகை காரணமாக நேற்று முன்தினம் அவற்றினை துண்டிக்க அதிகாரிகள் சென்றதாக தெரியவந்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்தனர். மேலும் ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை காரணமாக மின்சார வாரியமும் மின்சாரம் துண்டிக்க அங்கு சென்றிருந்தது.

பாதுகாப்பு பணியாளர்கள் மட்டுமே அங்கு இருந்ததால் துண்டிக்காமல் அதிகாரிகள் திரும்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரித்த போது, ​​அந்த வீட்டிற்கு 6 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தகைய நிலுவை தொகை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான வழக்கமான நடைமுறைக்கமைய, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் சென்றுள்ளனர்.

வீட்டில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், நீர் கட்டண பற்றாக்குறை குறித்து பொறுப்பான நபர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியமையினால் நீர் விநியோகத்தை துண்டிக்கப்படவில்லை.

விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.

அரசாங்க சொத்து ஆய்வாளர்கள் மகிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான பொருட்களை வரிசைப்படுத்தி அகற்றிய பின்னர் வீடு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என மகிந்த தரப்பு தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...