6 7
இலங்கைசெய்திகள்

ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் முன்வைத்துள்ள கோரிக்கை

Share

தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தாருங்கள் என ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆனணயகத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளாக இலங்கை தொடர்பான முக்கிய குழு நாடுகள், இலங்கையை முறையான OHCHR வழிமுறைகளை முன்மொழிய வலியுறுத்த வேண்டும் அதாவது கவுன்சிலில் நிகழ்ச்சி நிரல் 4 இன் கீழ் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் முன்னாள் OHCHR உயர் ஆணையர்கள் கோரியபடி இலங்கையை ICCக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிட்டிருந்தார் அத்துடன் பின்வரும் விடையங்களையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை சிங்கள அரசு டிசம்பர் 2008 முதல் மே 2009 வரை 140000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றதன் மூலம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது.

இந்த இனப்படுகொலைக்கு ஈழத் தமிழர்கள் சர்வதேச பாரபட்சமற்ற நீதியான விசாரணைகளை வழிமுறைகளைக் கோருகிறார்கள், கடந்த 16 ஆண்டுகளாக ஐ.சி.சி.யிடம் முறையிடுகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் மற்றும் வன்முறைகளுக்கு சர்வதேச நீதி கோரி பிரச்சாரகர்கள் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் கோபமடைந்தனர், தமிழ் தாய்மார்கள் கவுன்சிலின் வரைவுத் தீர்மானத்தையும் இலங்கை குறித்த உயர் ஆணையரின் கடைசி அறிக்கையையும் எரித்தனர்.

ஈழத்தமிழிர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நிலைமாறுகால நீதியை மேம்படுத்துவதையும் உறுதி செய்வதற்கான நமது முயற்சிகளுக்கு ஆதரவாக, தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்க அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம்.

அந்துடன் பொதுச் சபையின் 3வது குழு உறுப்பினர்கள் இலங்கையை ஐ.சி.சி.க்கு பரிந்துரைக்குமாறும், இலங்கை மீதான OHCHR விசாரணைக்கு நிதியுதவி அளிக்குமாறும் கோரினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...