6 7
இலங்கைசெய்திகள்

ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் முன்வைத்துள்ள கோரிக்கை

Share

தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தாருங்கள் என ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆனணயகத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளாக இலங்கை தொடர்பான முக்கிய குழு நாடுகள், இலங்கையை முறையான OHCHR வழிமுறைகளை முன்மொழிய வலியுறுத்த வேண்டும் அதாவது கவுன்சிலில் நிகழ்ச்சி நிரல் 4 இன் கீழ் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் முன்னாள் OHCHR உயர் ஆணையர்கள் கோரியபடி இலங்கையை ICCக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிட்டிருந்தார் அத்துடன் பின்வரும் விடையங்களையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை சிங்கள அரசு டிசம்பர் 2008 முதல் மே 2009 வரை 140000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றதன் மூலம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது.

இந்த இனப்படுகொலைக்கு ஈழத் தமிழர்கள் சர்வதேச பாரபட்சமற்ற நீதியான விசாரணைகளை வழிமுறைகளைக் கோருகிறார்கள், கடந்த 16 ஆண்டுகளாக ஐ.சி.சி.யிடம் முறையிடுகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் மற்றும் வன்முறைகளுக்கு சர்வதேச நீதி கோரி பிரச்சாரகர்கள் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் கோபமடைந்தனர், தமிழ் தாய்மார்கள் கவுன்சிலின் வரைவுத் தீர்மானத்தையும் இலங்கை குறித்த உயர் ஆணையரின் கடைசி அறிக்கையையும் எரித்தனர்.

ஈழத்தமிழிர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நிலைமாறுகால நீதியை மேம்படுத்துவதையும் உறுதி செய்வதற்கான நமது முயற்சிகளுக்கு ஆதரவாக, தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்க அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம்.

அந்துடன் பொதுச் சபையின் 3வது குழு உறுப்பினர்கள் இலங்கையை ஐ.சி.சி.க்கு பரிந்துரைக்குமாறும், இலங்கை மீதான OHCHR விசாரணைக்கு நிதியுதவி அளிக்குமாறும் கோரினார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...