16 1
இலங்கைசெய்திகள்

ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

Share

அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள். ஆனால் தடை நீக்கப்பட்டது ஏனென்றால் அவர்கள் பெரும்பான்மை என்பதால்தான் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் தொடர்ந்து கூறியதாவது, 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, கொல்லப்பட்டு அனைவரும் வடக்குக்கு விரட்டப்படும் போது எங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் எடுத்தோம்.

ஆயுதம் ஏந்தி போராடிய ஜே.வி.பி பயங்கரவாதிகள் அல்ல நாங்கள் மட்டும் பயங்கரவாதிகளா? ஒரே நாட்டில் ஏன் வேறுபாடுகள்?இங்கே தான் தமிழ் – சிங்கள பிரச்சினை தோன்றுகிறது. சம்பவங்களை நாம் பார்க்கும் நோக்கில் தான் பயங்கரவாத கோணங்கள் தோன்றுகிறது.

செம்மணி மனித புதைகுழியில் கைக்குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படியானால் கைக்குழந்தைகள் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தார்களா? தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததெல்லாம் சரி என்று நான் சொல்லமாட்டேன்.

யுத்தம் நடைபெறும் போது இரு பக்கமும் தவறுகள் ஏற்படலாம். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்தாலும், மக்களின் மனதில் இருப்பதை தடுக்க முடியாது.

நான் உண்மை உரைப்பதால் மக்கள் என்னை விரும்புகின்றனர்.எனக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசித் தலைவரை கடவுளாக வணங்கவும் முடியும் அதேபோல் மற்றையவரின் கடவுளை மதிக்கவும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...