14 1
இலங்கைசெய்திகள்

நவம்பர் மாதம் முதல் நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்! வெளியான வர்த்தமானி

Share

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பொருட்கள் கொள்வனவின்போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுத்து, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பொலித்தீன் பைகளுக்கு அறவிடப்படும் தொகை நுகர்வோருக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட வேண்டுமென அந்த வர்த்தமானியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலித்தீன் பைகளின் விலை விற்பனை நிலையங்களில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்கள் கொள்வனவின் போது, பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக, சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளினால் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டது.

பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதன் காரணமாக அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தினை நடைமுறைப்படுத்த உதவுமாறுக்கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...