6 3
உலகம்செய்திகள்

ரஷ்ய கப்பலை சுற்றி வளைத்த பிரான்ஸ் வீரர்கள்: உலக அரசியலில் பரபரப்பு

Share

பிரான்ஸ் கடற்படை வீரர்கள், ரஷ்யாவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றை சுற்றி வளைத்த சம்பவம் உலக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

பிரான்சிலுள்ள Saint-Nazaire என்னுமிடத்தின் அருகிலுள்ள கடற்கரையில் புஷ்பா என பெயரிடப்பட்டுள்ள பிரம்மாண்ட கப்பல் ஒன்று பயணித்துள்ளது.

உடனடியாக அதை சுற்றி வளைத்த பிரான்ஸ் கடற்படை வீரர்கள், கப்பலில் ஏறி அதை சோதனையிட்டனர்.

விடயம் என்னவென்றால், கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் எல்லைக்குள் மர்ம ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டவண்ணம் உள்ளன.

கடந்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதிவரை ரஷ்ய கிராமமான Ust-Luga என்னுமிடத்தில் 801 அடி நீள பிரம்மாண்ட எண்ணெய்க்கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர் அது அங்கிருந்து புறப்பட்டு செயின்ட் பீற்றர்ஸ்பர்குக்கு அருகிலுள்ள Primorsk துறைமுகத்தை அடைந்தது. அந்த துறைமுகம் பின்லாந்து வளைகுடாவுக்கு எதிரே உள்ளது.

10 மணி நேரம் அங்கு நின்ற அந்தக் கப்பல், பிறகு போலந்து, ஸ்வீடன் கடற்கரைகள் வழியாக செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி டென்மார்க்கை அடைந்தது.

ஆக, அந்த மர்ம ட்ரோன்களுக்கும் இந்த கப்பலுக்கும் தொடர்பிருக்கலாம். அதாவது, அந்த ட்ரோன்கள் இந்த கப்பலிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி அந்தக் கப்பல் பிரான்ஸ் கடற்பகுதிக்குள் நுழைய, உடனடியாக பிரான்ஸ் கடற்படை வீரர்கள் அந்தக் கப்பலை சுற்றிவளைத்தனர்.

இந்நிலையில், அந்தக் கப்பல் பணியாளர்கள் சட்டப்படி தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அந்தக் கப்பல் பணியாளர்கள் மிக பயங்கர குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால், அவர்கள் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...