18
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Share

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளான டோபமைனின் (Dopamine) வெளியிடுதல் தாமதமாகும் போது குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளில் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது, அதனால் குழந்தைகள் அதற்கு அடிமையாவது அதிகமாகிறது என்று அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் குழந்தை மற்றும் இளம் பருவ மனநல மருத்துவரான சேனானி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையாவதற்கான மருத்துவ காரணம் குறித்து தெளிவுபடுத்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: குழந்தைகள் தொலைபேசியை பாவிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள்.

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இரசாயனம் டோபமைன், ஆரம்ப நாட்களில் தொலைபேசியை பாவிக்கும் மிகக் குறுகிய நேரத்திற்குள் வெளியிடப்படும் போது குழந்தை மகிழ்ச்சியடைகிறது.

பின்னர் குழந்தைகள் தொலைபேசியை வைத்து விடுகிறார்கள். ஆனால் நேரம் செல்ல செல்ல, டோபமைன் வெளியிட எடுக்கும் நேரம் அதிகரிக்கிறது.

உதாரணமாக, ஆரம்ப நாட்களில் டோபமைன் அரை மணி நேரம் வெளியிடப்பட்டால், பின்னர் வெளியிட ஒரு மணி நேரம் ஆகும்.

பின்னர் குழந்தை சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியை கீழே வைக்காது. அதிக நேரம் டோபமைன் வெளியிட இரண்டு, மூன்று அல்லது நான்கு மணிநேரம் கூட ஆகலாம்.

குழந்தை சுமார் நான்கு மணி நேரம் தொலைபேசியை கீழே வைக்க மாட்டார்கள்.

ஒரு குழந்தை தொலைபேசிக்கு அடிமையாகி இருப்பதை நாம் இப்படித்தான் பார்க்கிறோம்.

எனவே, குழந்தைகள் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். பெற்றோர்கள் அதை மேற்பார்வையிட வேண்டும்.

குழந்தைகள் அறைகளிலிருந்து தொலைபேசியைப் பாவிக்க அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் வீடியோ கேம்களில் கவனம் செலுத்த விடாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...