19
இலங்கைசெய்திகள்

இலங்கையின் உயிர் மாய்ப்பு தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள்!அதிகரித்துள்ள மனநலம் பாதிப்பு

Share

இலங்கையில் வருடத்தில் மூவாயிரத்து இருநூறு (3200) பேர் மனநலப் பிரச்சினைகள் காரணமாக உயிர் மாய்ப்பு செய்து கொள்கிறார்கள் என அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வருடத்திற்கு 80 மாணவர்கள் உயிர் மாய்ப்பு செய்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் மனநோய்களுக்கான நிபுணர் வெளியிட்டுள்ள தகவலின்படி,

”நாட்டில் உயிர் மாய்ப்பு வீதம் அதிகரிப்பு இல்லையானாலும், உயிர் மாய்ப்பு பட்டியலில் இலங்கை 21வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் உயிர் மாய்ப்பு தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள்!அதிகரித்துள்ள மனநலம் பாதிப்பு | Many Shocking Reports About Suicide In Sri Lanka

பொருளாதார நெருக்கடி காரணமாக உயிர் மாய்ப்பு அதிகரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மனநலப் பிரச்சினை ஏற்பட்டால், அங்கொடா தேசிய மனநல நிறுவனத்தின் 24 மணி நேர தொலைபேசி சேவையான 1926 ஐ அழைத்து ஆலோசனை பெறலாம் என்றும், இந்த அழைப்பிற்கு கட்டணம் அறவிடப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.

பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் முழுவதும் கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளுக்கு அடிமையாகியுள்ளதால், இதுவும் ஒரு மனநோய் என்றே அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் 15 முதல் 20 சதவீத மக்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சோகம், பாலியல் ஈடுபாடு குறைதல், தூக்கமின்மை, பசியின்மை, எரிச்சல் மற்றும் நடத்தை வேறுபாடுகள் இதற்கு காரணமாக குறிப்பிடப்படுகின்றன.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளனர். ஐஸ், கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை காரணமாக மனநோய்கள் ஏற்படலாம். மற்றொரு மனநோய் டிமென்ஷியா. அதாவது, மறதி ஆகும்.

அங்கொடை மருத்துவமனையில் சுமார் 500 மனநோயாளிகள் குணமடைந்துள்ளனர். ஆனால் அவர்களது உறவினர்கள் அவர்களை அழைத்துச் செல்வதில்லை.

நோயாளர்களின் உறவினர்களின் முகவரிகளை சரிபார்த்தால், அந்த முகவரிகளில் அவர்கள் இல்லை. இந்த நோயாளிகள் 30-40 வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் குணமடைந்தாலும், அவர்களது குடும்பங்களின் நிதிப் பிரச்சினைகள் காரணமாக யாரும் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாரில்லை” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...