19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

Share

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த தகவல்களில் குறிப்பிடப்படிருக்கும் விடயங்களின்படி, 1920 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி இலங்கையின் வனப்பரம்பல் 49 முதல் 50 வீதம் வரை இருந்துள்ளது.

ஆனால் 80 வருடங்களின் பின்னர் 20 வீத வனப்பரம்பலே இருக்கிறது. அவ்வாறு என்றால் இலங்கையில் காடுகள் இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது.

இவற்றின் அடிப்படையில் நோக்கினால் யானைகள் வாழ்வதற்கான காடுகள் இல்லை. அதன் படி 70 வீத யானைகள் வாழ்ந்த நிலப்பரப்பில் மக்கள் வாழ்விடங்களை அமைத்துள்ளனர்.

இலங்கையின் மொத்த நிலப்பகுதியில் 82 வீதம் மக்கள் வசிக்கும் பகுதிகளாகும்.அவற்றில் யானைகளில் வாழ்விடங்களாக 62 வீதம் காணப்படுகிறது.

இதுவே யானை மனித மோதல் உக்கிரமடைவதற்கான மூல காரணமாகும்.

இலங்கையில் சுமார் 6000 யானைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் சரியான தகவல்கள் இல்லை. அவ்வாறு எடுத்துப் பார்த்தால் 6000 யானைகளில் 4000 யானைகள் மனிதர்களுடன் சேர்ந்திருப்பதாக கொள்ள வேண்டும்.

அதாவது 19 மாவட்டங்களில் 131 பிரதேச செயலர் பகுதிகளிலும் யானைகள் வியாபித்து காணப்படுகிறது. ஆகையால் யானை மனித மோதலை அரசியலாக பார்க்க வேண்டாம்.அவை சமூக -பொருளாதார் பிரச்சினையாக நோக்கினால் தீர்வை கொடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...