10
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்த இலங்கைக்கு அவசர அழைப்பு!

Share

இந்தியாவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க, சமீபத்தில் முடிவடைந்த பிரித்தானிய – இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து (FTA) இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் இந்திய – இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை கூறியுள்ளது.

மேலும், இதேபோன்ற இருதரப்பு ஒப்பந்தத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

பிரித்தானிய பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 4.8 பில்லியன் யூரோவை சேர்க்கும் அதே வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான சந்தை அணுகல் மற்றும் முதலீடுகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அறிவித்துள்ளது.

பிரித்தானிய – இந்தியா FTA-வை மேற்கோள் காட்டி, இலங்கை அதன் புவியியல் அருகாமை மற்றும் இந்தியாவுடனான தற்போதைய உறவுகள் காரணமாக இன்னும் அதிக இலாபம் ஈட்டும் என்று குறித்த சபை தெரிவித்துள்ளது.

“நன்கு கட்டமைக்கப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு.

இந்தியாவுடன் ஈடுபடுவதற்கு இலங்கை , பிரித்தானியாவை விட புவியியல் ரீதியாக மிகவும் சிறந்த நிலையில் உள்ளது.

நாங்கள் நெருக்கமான கலாச்சார, வரலாற்று மற்றும் பொருளாதார உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம்,

மேலும் இந்தியா எங்கள் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது,” என்று குறித்த சபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....