10
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்த இலங்கைக்கு அவசர அழைப்பு!

Share

இந்தியாவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க, சமீபத்தில் முடிவடைந்த பிரித்தானிய – இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து (FTA) இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் இந்திய – இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை கூறியுள்ளது.

மேலும், இதேபோன்ற இருதரப்பு ஒப்பந்தத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

பிரித்தானிய பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 4.8 பில்லியன் யூரோவை சேர்க்கும் அதே வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான சந்தை அணுகல் மற்றும் முதலீடுகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அறிவித்துள்ளது.

பிரித்தானிய – இந்தியா FTA-வை மேற்கோள் காட்டி, இலங்கை அதன் புவியியல் அருகாமை மற்றும் இந்தியாவுடனான தற்போதைய உறவுகள் காரணமாக இன்னும் அதிக இலாபம் ஈட்டும் என்று குறித்த சபை தெரிவித்துள்ளது.

“நன்கு கட்டமைக்கப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு.

இந்தியாவுடன் ஈடுபடுவதற்கு இலங்கை , பிரித்தானியாவை விட புவியியல் ரீதியாக மிகவும் சிறந்த நிலையில் உள்ளது.

நாங்கள் நெருக்கமான கலாச்சார, வரலாற்று மற்றும் பொருளாதார உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம்,

மேலும் இந்தியா எங்கள் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது,” என்று குறித்த சபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....