5
இலங்கைசெய்திகள்

மத ஸ்தலங்களில் அரசியல் காடைத்தனம் : அரசாங்கத்தை சாடும் நாமல்

Share

மத ஸ்தலங்களுக்கும் தங்களின் அரசிலை புகுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று(01) ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மத ஸ்தலங்களில் நடக்கும் நிகழ்வுகளுக்கு கிடைக்கும் பணத்தையும் கணக்காய்வு செய்ய வேண்டும் என்ற புதிய சட்டங்களையும், அப்படி கிடைக்கும் பணம் கறுப்பு பணம் என்று கூட அரசாங்கம் சொல்லும்.

இன்று அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க அரச பலத்தை பயன்படுத்தி தங்களின் அரசியலை திணிக்க முயற்சிக்கிறது.

இளைஞர் சங்கங்கள் மற்றும் கிராமத்திலுள்ள மரண சங்கங்களிலும் அரசாங்கம் தங்களின் அரசியலை புகுத்த அரச அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

தங்களின் தவறுகளை மூடி மறைக்க அரச பணியார்களை பலிகடாவாக்குகின்றனர்.

உதாரணமாக 300 கொல்கலன்களை விடுவித்த சந்தர்ப்பத்தில் சுங்க அதிகாரிகளை பலிகடாவாக்கினர். ஒன்றும் செய்ய முடியாத போது தான் பழிவாங்கல் ஆரம்பமாகிறது.அரசாங்கம் அதையே இன்றும் செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....