5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

Share

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட அமெரிக்க தயாரிப்பு குண்டு ஒன்றை வீசியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை(30.06.2025) நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் அப்பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டதால் இது ஒரு போர்குற்றமாக கருதப்படுகின்றது.

எனினும், தாக்குதல் நடத்தப்பட முன்னர், வான்வழி கண்காணிப்பைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், நெரிசல் மிகுந்த விடுதியில் இவ்வளவு பெரிய ஆயுதத்தைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெர்ரி சிம்ப்சன் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...