7 10
இலங்கைசெய்திகள்

அதிரும் தமிழக திரைத்துறை..! தொடரும் கைது நடவடிக்கைகள்

Share

தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், தென்னிந்திய திரைத்துறையில், போதைவஸ்து பாவனை தொடர்பில், பல முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சர்வதேச போதைப்பொருள் விநியோகஸ்தர் என்று கருதப்படும் சென்னையை சேர்ந்த, கெவின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் திடுக்கீடும் தகவல்களை வழங்கியுள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில், நடிகர் கிருஸ்ணா அத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதில், தாம் முழு நேர தொழிலாக ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கெவின், விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தமக்கு ஜெய்வீர் என்ற புனைப்பெயர் இருப்பதாக கூறியுள்ள அவர், தென்னிந்திய திரைத்துறையினர் தம்மை பவுடர் ஜெஸ்வீர் என்றே அழைப்பர் என்றும் கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நடிகர் – நடிகையரை விட, சினிமா பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்களே தமது வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நடிகர் – நடிகையர் பிறந்த நாள் நிகழ்வுகள், படங்களின் வெற்றி விழா கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளுக்காகவும் தாம் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நெருங்கிய நண்பரான நடிகர் கிருஸ்ணா அடிக்கடி அவரது நண்பர்களுக்கு விருந்து வழங்குவார் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இரவு நேர தூக்கம் தொலைத்து பணிபுரியும் மென்பொருள் நிறுவன ஊழியர்களும், கொக்கைன் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் கொக்கைனை விற்றுள்ளதாக கெவின் தகவல் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில், கெவின் வழங்கியுள்ள இந்த வாக்குமூலம் தற்போது தென்னிந்திய திரைத்துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் காலத்தில் பல நடிகர்கள், இயக்குநர்கள் விசாரணைகளுக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...