7 10
இலங்கைசெய்திகள்

அதிரும் தமிழக திரைத்துறை..! தொடரும் கைது நடவடிக்கைகள்

Share

தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், தென்னிந்திய திரைத்துறையில், போதைவஸ்து பாவனை தொடர்பில், பல முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சர்வதேச போதைப்பொருள் விநியோகஸ்தர் என்று கருதப்படும் சென்னையை சேர்ந்த, கெவின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் திடுக்கீடும் தகவல்களை வழங்கியுள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில், நடிகர் கிருஸ்ணா அத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதில், தாம் முழு நேர தொழிலாக ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கெவின், விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தமக்கு ஜெய்வீர் என்ற புனைப்பெயர் இருப்பதாக கூறியுள்ள அவர், தென்னிந்திய திரைத்துறையினர் தம்மை பவுடர் ஜெஸ்வீர் என்றே அழைப்பர் என்றும் கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நடிகர் – நடிகையரை விட, சினிமா பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்களே தமது வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நடிகர் – நடிகையர் பிறந்த நாள் நிகழ்வுகள், படங்களின் வெற்றி விழா கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளுக்காகவும் தாம் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நெருங்கிய நண்பரான நடிகர் கிருஸ்ணா அடிக்கடி அவரது நண்பர்களுக்கு விருந்து வழங்குவார் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இரவு நேர தூக்கம் தொலைத்து பணிபுரியும் மென்பொருள் நிறுவன ஊழியர்களும், கொக்கைன் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் கொக்கைனை விற்றுள்ளதாக கெவின் தகவல் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில், கெவின் வழங்கியுள்ள இந்த வாக்குமூலம் தற்போது தென்னிந்திய திரைத்துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் காலத்தில் பல நடிகர்கள், இயக்குநர்கள் விசாரணைகளுக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...